
இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இதில் பெரும்பாலும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களே பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய் ஆகும். கைக்குத்தல் அரிசியை விடுத்து, தீட்டப்பட்ட அரிசியையே நாம் உணவாக உண்கிறோம்.
இந்த அரிசியானது, சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துக்களும் நீக்கப்பட்டது ஆகும்.
இதனாலேயே உடலில் சர்க்கரை அளவு உயருகிறது. எனவே, கைக்குத்தல் அரிசியையும், சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை பாதிப்பு குறைந்து, அதன் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பும் கட்டுப்படுத்தப்படும்.
சிறுநீரகப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் உப்பு. பொதுவாக கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கும். இவை உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் ஆகும்.
0 comments:
Post a Comment