
சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில் அது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
தேநீர் குடிக்கக் கூடாது

புகை பிடிக்கக் கூடாது
சிலரிற்கு உணவு உண்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. உண்வு உண்டதும் புகைக்கத்தால் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது
சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என சிலர் இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் . இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
குளிக்கக் கூடாது
ஏனெனில் சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது. ஆகவே சாப்பிட்ட உடன் குளிப்பதை தடுக்கவேண்டும்.
நடக்கக் கூடாது
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
அதுபோல சாப்பிட்டதும் தூங்கக் கூடாது
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. இதனால் வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும். எனவே சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்லகூடாது.
0 comments:
Post a Comment