1. குடசப்பாலை மரப்பட்டை. சந்தனம்.
செய்முறை:
குடசப்பாலை மரத்தின் பட்டையை
எடுத்து இடித்து பொடியாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன்
சந்தனப் பொடியை கலந்து தண்ணீர்
விட்டு குழைத்துப் பருக்கள் மீது பூசி வந்தால்
பருக்கள், தழும்புகள் குறையும்.
2. ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு. பசும்மஞ்சள். வசம்பு. தேங்காய் எண்ணெய்.
பயற்றம் மாவு
செய்முறை:
ஆடுதீண்டாப்பாளை இலையை இடித்து
கால் லிட்டர் அளவுக்குச் சாறு எடுத்துக்
கொள்ளவேண்டும். 25 கிராம் பசும்மஞ்சள், 15 கிராம் வசம்பு, கால் லிட்டர் தேங்காய்
எண்ணெய்
ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். பசும்மஞ்சளையும் வசம்பையும்
சிறிதளவு நீர்
விட்டு மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை
ஆடுதீண்டாப்பாளைச் சாற்றில்
கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும்.
மறுநாள் தேங்காய் எண்ணெயுடன்
தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச
வேண்டும். எண்ணெய் திடமாகித்
தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு
பாத்திரத்தில் பத்திரப்படுத்திக்
கொள்ளவேண்டும். முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித்
துடைத்த பிறகு இந்த எண்ணெயை
முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்கவேண்டும்.
எண்ணெய் அரை மணி நேரம் ஊறிய பிறகு
பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு
சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து
செய்து வந்தால் முகப்பருகுறையும்.
3. படிகாரம்
செய்முறை:
சிறிது படிகாரத்தை எடுத்து
தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால்
முகத்தை சில நாட்கள் தொடர்ந்து
கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய
தழும்புகள் குறையும்.
0 comments:
Post a Comment